சிவகங்கையில் திருப்பத்தூர், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அறைக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் விளக்கமளித்து காட்டுதல், எந்திரங்களை சரிபார்த்தல், பழுதான எந்திரங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. […]
