திண்டுக்கல் பழனி அருகே மாப்பிள்ளை பார்க்க காரில் சென்றவர்கள் விபத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்தவர் மகாலட்சுமி இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு தனது உறவினர்கள் நட்ராஜ், கருப்பண்ணன், முத்தம்மாள் ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். கரடிக்கூட்டம் அருகே கார் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் மணிவேல் […]
