நெல்லையில் பறக்கும் படையினர் தி.மு.க சின்னம் பொறித்த தொப்பிகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் தேர்தல் பறக்கும் படையின் அதிகாரியான டெபி தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் […]
