சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தை அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் காய்கறி விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள 4 உழவர் சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வார்டுகளிலும் வாகனங்களில் காய்கறிகள் கொண்டு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதனால் காய்கறி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் மளிகை […]
