பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதியில் குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படாமல் இருந்தது. இதனையடுத்து சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ன பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். எனவே பேரூராட்சி அலுவலகத்தில் […]
