ஆப்கானிஸ்தானின் தலைநகரில் பல வருடங்களாக நடந்த மோதல், மோசமான நீர் மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரில் அதிகாரிகள் பலரும் தண்ணீர் பற்றாக்குறை ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே காபூலின் மேயர் ஹம்துல்லா நோமானி ஆப்கானிஸ்தானின் தலைநகரம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போகும் நிலையும் உள்ளதாக கூறியுள்ளார். மேலும் நோமானி குடிநீர் வழங்கும் நிறுவனங்களுடன் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த […]
