பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]
