காந்தி கிராம பல்கலைகழகத்தின் பதிவாளரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், அருகிலுள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் சிவகுமார் என்ற நபர் பொறுப்பாளர் பதவியில் பணியாற்றி வருகின்றார். ஆறு மாதங்களில் இவரது பணி முடிவடைய இருந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த அறிவிப்பில் பதிவாளர் பணியிலிருந்த சிவகுமாரின் பெயரையும் படத்தையும் நீக்கி பேராசிரியரான சேதுராமனின் புகைப்படத்தை வைத்து அந்த பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் என இணையதளத்தில் வெளியாகியுள்ளது. […]
