காதல் மனைவியை பிரித்து வைத்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மனைவியின் பெற்றோர் மற்றும் சகோதரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேதாஜி சவுக் பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2 மகள்களுக்கு திருமணமாகி குடியாத்தம் பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது மகளான மோனிஷா […]
