பெண்ணை ஏமாற்றிய காதலன் உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள அனுப்பபட்டியில் கருப்பசாமி(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கருப்பசாமியும், 33 வயதுடைய பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கருப்பசாமி திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் 2 பேரும் திருமங்கலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். […]
