தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக தங்கும் விடுதியை திறந்து வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே ஆட்டுப்பாக்கம் பகுதியில் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மாணவ- மாணவிகளுக்கான தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் விடுதிக்கு 3.74 கோடியும், மாணவிகளின் விடுதிக்கு 4.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தங்கும் விடுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதன்பிறகு […]
