கிணற்றிலிருந்து பட்டதாரி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் அருகே காராமணிக்குப்பம் பகுதியில் பட்டதாரியான சக்திவேல் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது திடீரென மாயமாகியுள்ளார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன் தினம் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் மற்றும் […]
