காட்டெருமை தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செந்திட்டு பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கிருபாகரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் தனது தந்தை கோவிந்தனுடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது குப்பனூர்-சேலம் மலைப்பாதையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் […]
