கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் சிங்கம்பட்டு காட்டுப்பகுதியில் இருந்து இரை தேடி காட்டெருமை வெளியே வந்தது. இந்நிலையில் மூலக்காடு கிராமத்தில் வசிக்கும் குமரேசன் என்பவரது விவசாய கிணற்றில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. பின்னர் தண்ணீரில் மூழ்கி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த குமரேசன் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டெருமையின் உடலை கயிறு கட்டி […]
