இறந்து கிடந்த யானையின் உடலை வனத்துறையினர் குழி தோண்டி புதைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பூணாச்சி என்ற இடத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பர் ஆழியாறு பள்ளம் அருகே யானை இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி வனபாதுகாவலர் செல்வம் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயராகவன், வால்பாறை அரசு […]
