ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் […]
