Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மீண்டும் வால்பாறைக்கு இடம்பெயரும் காட்டு யானைகள்…. வனத்துறையினர் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சென்ற வருடம் மார்ச்மாதம் இறுதியில் வறட்சி துவங்கியது. இதன் காரணமாக வால்பாறை வனப் பகுதியிலிருந்த காட்டு யானைகள் கூட்டம் கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்போது தென் மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுதும் பசுமையாக காட்சியளிக்கிறது. இதையடுத்து கேரள வனப் பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் மீண்டுமாக வால்பாறை வனப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி இருக்கிறது. தமிழக, கேரள எல்லையிலுள்ள வால்பாறை வனப் பகுதி, சாலக்குடி வனப் பகுதியில் காட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடியிருப்புக்குள் புகுந்து அட்டுழியம் செய்யும் யானைகள்…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், சோலைக் காடு, கொக்குப்பாறை ஆகிய பகுதிகளில் சென்ற சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் தோட்டங்களுக்கு போக முடியாமல் அச்சமடைந்துள்ளனர். மேலும் யானைகள் நடமாட்டத்தால் கூலித் தொழிலாளிகளும் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில் சோலைக்காட்டை சேர்ந்த பூதப்பாண்டி, பட்டத்துவேல், கோபி, பரமேஸ்வரி போன்றோரின் தோட்டத்துக்குள் நேற்று முன்தினம் காட்டு யானைகள் நுழைந்து அங்கு பயிரிட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு ஆகியவற்றை சேதப்படுத்தியது. அத்துடன் இரவு நேரங்களில் அவை ஊருக்குள் வலம் வருகிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மஞ்சூர்- கோவை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து”…. வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு….!!!!!

மஞ்சூர்- கோவை இடையேயான சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை காட்டு யானைகள் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரிலிருந்து முள்ளி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை சாலை செல்கின்ற நிலையில் சமீபகாலமாக சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது. இதன் அருகே வனப்பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் கோவையில் இருந்து மஞ்சூர் அருகே நேற்று மாலை அரசு பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பொழுது 5 காட்டு யானைகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம்… சேதமடைந்த பயிர்கள்… விவசாயிகள் கோரிக்கை…!!

கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதபடுத்தி வருவதால் வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள பண்ணைபுரம் மலையாடிவார பகுதியில் கோட்டமலை, தீக்குண்டு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் விவசாயிகள் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த சில வாரங்களாக காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இதனைதொடர்ந்து நேற்று பண்ணைபுரம் பகுதியில் 4 காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிரிடபட்டிருந்த வாழைகளை சேதபடுத்தியுள்ளது. மேலும் […]

Categories

Tech |