காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள சேவூர் பகுதியில் உள்ள தொட்டி பாளையத்தில் சிலர் காட்டுப் பன்றி இறைச்சி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் அன்பரசும், சர்வேஸ்வரன் மற்றும் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் தோட்டத்து பகுதியில் உள்ள பள்ளத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் […]
