சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய சொந்த தொகுதியில் சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சத்தியமூர்த்தி பவன் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், தமிழக காங்கிரஸ் கட்சி பதவி தனக்கு வழங்கினால் சத்தியமூர்த்தி பவனியில் நடக்கும் பிரச்சினைகளை முற்றுப்புள்ளி வைப்பேன். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்க கோரி பலமுறை அறிவித்திருக்கிறேன். […]
