காங்கிரஸ் கட்சியின் எம்பியான ஜோதிமணி, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில், நாற்காலிகள் காலியாக இருந்ததால், அவர் திரும்பி சென்றதற்கு பஞ்சாப் முதல்வர் எப்படி பொறுப்பாவார்? என்று கேட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் எம்.பியான ஜோதிமணி தெரிவித்திருப்பதாவது, பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் மாநிலத்திற்குள் வரவிடாமல் விவசாயிகள் தடுத்துள்ளனர். ஒரு வருடமாக கடுமையான குளிர் மற்றும் மழையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில், 700 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும், அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தார். […]
