நாங்குநேரி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த மோதலுக்கு ரூபி மனோகரணே காரணம்.அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என புதிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
