கவுன்சிலரை காரில் கடத்தி சென்று 40 பவுன் தங்க நகைகளை பறித்த 9 பேர் சேர்ந்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள். தென்காசி மாவட்டம், புளியங்குடி அடுத்துள்ள தலைவன் கோட்டை பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துப்பாண்டியன் என்பவருடைய மகன் 36 வயதுடைய விஜய பாண்டியன். இவர் நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருக்கின்றார். மேலும் வாசுதேவநல்லூர் ஊராட்சியில் தலைவன்கோட்டை ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். இவரிடம் பணம் கேட்டு சிலர் […]
