நகராட்சி கவுன்சிலரை பெயிண்டர் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவராஜ்பேட்டை பகுதியில் வெற்றிகொண்டான் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவராவார். தற்போது வெற்றிகொண்டான் 36-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இவரது வீட்டிற்கு அருகே பெயிண்டரான முரளியும், அவருடன் வந்த மூன்று நபர்களும் இணைந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த வெற்றிகொண்டான் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது முரளி தான் […]
