காதலித்த பெண் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தன் நண்பனோடு சேர்ந்து அவளைக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் சிறைபிடித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்தது. அது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தென்னம்பட்டி யை சேர்ந்த ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. ஜெயஸ்ரீ தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு […]
