அமெரிக்கா நாட்டில் தெற்கு கரோலினா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நான்கு வயது நிரம்பிய நாய் ஒன்று கழுத்தில் அம்பு எய்திய நிலையில் காணப்பட்டது. அந்த நாய்க்குட்டி வலியால் அலறுவதைக் கேட்ட பெண் ஒருவர் விலங்கு சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாயை பரிசோதனை செய்த அவர்கள், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நாயை பரிசோதித்த மருத்துவர்கள், நாயின் தமனிகளை அம்பு தாக்கவில்லை என்றும், அம்பினால் நாய்க்கு பெரிய பாதிப்பு இல்லை […]
