குளித்தலை பகுதியில் மாடு கழிவு நீர் குழியில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் பசு மாடு ஒன்று தெருவோரம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்கியிருந்த குழியில் விழுந்த மாடு வெளியில் வர முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அதை மீட்க வழித் தெரியாமல் இருக்க அங்கு வந்த ஒருவர் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தார். இதனையடுத்து மாடு விழுந்து குழியின் அருகே […]
