நாடாளுமன்ற எம்பி ஜெயந்த் சிங் சவுத்ரி எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதிலில், இந்தியாவில் சென்ற 5 வருடங்களில் கழிவு நீர் தொட்டி மற்றும் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது விஷ வாயு தாக்கியதில் 352 பேர் வரை இறந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். தற்போது நாட்டில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் யாரும் ஈடுபட்ட தகவல் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கழிவுநீர் […]
