கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் கோடப்பந்து கால்வாய் பிரதான கால்வாயாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் கனமழையின் போது பெருக்கெடுத்து வரும் வெள்ளம் ஊட்டி ஏரியில் சேருகிறது. இந்த கால்வாயில் கடந்த சில மாதங்களாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்துள்ளது. இதுகுறித்து புகார் அளித்தும் கால்வாயை பராமரித்து வரும் பொதுப்பணித்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இதையறிந்த […]
