பள்ளிபாளையம் அருகே நூற்பாலை கழிவுநீர் சாக்கடையில் கலப்பதால் இதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் வெப்படை அடுத்துள்ள பாதரைப் பகுதியில் ஏராளமான நூற்பாலைகள் உள்ள நிலையில் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரானது சாக்கடையில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் நூற்பாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடையில் கலப்பதை கண்டிக்கும் விதமாக பொதுமக்கள் பாதரை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து போலீசார், தாசில்தார் […]
