தமிழகத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை பயன்படுத்தும் நடைமுறையை ஒழிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டிகள், சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது என்றும், விஷவாயு தாக்கி உயிர் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், சபாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு […]
