பயணிகள் ரயிலில் கழிவறை மற்றும் கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இதில் ஈரோடு – கோயம்புத்தூர், சேலம்-கோயம்புத்தூர், ஈரோடு-பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில்களின் சேவையும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனையடுத்து ஈரோட்டில் இருந்து கோயம்புத்தூர், பாலக்காடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மெமு ரயில் இயங்கி வந்தது. […]
