தென்காசி மாவட்டத்தில் அனுமதியின்றி கள் விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் 50 லிட்டர் கள்-ஐ பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள நாலாம் கட்டளையில் அனுமதியின்றி கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரசையன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த செபஸ்தியான் என்பவருடைய மகன் ராபர்ட்(25) கள் விற்பனை செய்தது உறுதியாகியுள்ளது. மேலும் அங்கிருந்த […]
