கோவையில் தனியார் வங்கி ஒன்றில் இன்ஜினியர் ஒருவர் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கப்பக்கொடை நாடு அடுத்துள்ள நஞ்சநாடு பகுதியில் ஹிந்தேஸ் ஆனந்த் (33) என்பவர் வசித்து வருகிறார். அவர் தற்போது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கின்ற ஒரு ஐடி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றார். அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவையை அடுத்துள்ள வடவள்ளி அருகே ஓணம் பாளையம் என்ற […]
