கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக 8 வயது சிறுவனை அடித்து உதைத்து சித்ரவதை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கமகளூரு மாவட்டம் கடூர் டவுன் ரோட்டில் வசித்து வருபவர் வசந்தா இவருக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். வசந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. […]
