திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளகாதலி வற்புறுத்தியதால் காவல்துறை அதிகாரி பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியில் திருமுருகன் என்பவர் வசித்து வருகிறார். ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று கீரைத்துறை காவல் நிலையத்திற்கு சென்று அதிகாரிகளிடம் தான் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் திருமுருகனிடம் நடத்திய விசாரணையில், தேனி மாவட்டம் போடி அருகே வனத்துறை அலுவலகம் பகுதியில் […]
