கல் கிடங்கு நீரில் மூழ்கி குளித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கே.மடத்துப்பட்டி ராஜீவ்காலனியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சிவகாசி அருகில் எம்.துரைச்சாமிபுரத்தில் நடந்த உறவினர் வீட்டு இறுதிச்சடங்கில் கலந்து விட்டு பின் தனது மனைவி, குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மணியம்பட்டி கல் கிடங்கு அருகில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் குளித்துள்ளார். இந்நிலையில் செல்வக்குமார் மகன் ஞானகுருசாமி திடீரென தண்ணீரில் மூழ்கிவிட்டார். […]
