கல்வி நிறுவனங்களில் மாணவர்களுடைய பாதுகாப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகிவிட்டது. அந்த அளவிற்கு மாணவர்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் உடன் பயிலும் சக மாணவர்கள் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய கல்வி வாரியத்தின் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சபிதா ரெட்டி மாணவர்களின் பாதுகாப்பை கல்வி நிலையங்களில் உறுதி செய்யும் பொருட்டு பாதுகாப்பு கிளப்புகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். […]
