தமிழகத்தில் மாணவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்ததும் அவர்களுக்கான சான்றிதழ்களை உயர்கல்வி நிறுவனங்கள் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று அனைத்து வகையான உயர் கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ்கள் வழங்குவதில் சிரமம் ஏற்படுவதால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு, விசா நீட்டிப்பை கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
