சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பரவியதால் அனைத்து துறைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்த மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு சென்னை ஐஐடியில் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை […]
