கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி, இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
