மன அழுத்தம் காரணமாக கல்லூரி அலுவலக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தென்தாமரைகுளம் பகுதியில் குமார் வேதமாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஞானசெல்வம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பீனா குமாரி என்ற மகளும், ஷிபுகுமார் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புஅவரது மகளான பீனாகுமரியின் திருமணத்திற்காக கடன் வாங்கியிருந்தார். […]
