பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இதனிடையே நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும், வருகிறது. மேலும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசும், மாநில அரசும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி […]
