முதியவரை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ஆவாரங்காடு பகுதியில் வேலப்பன் என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அருகே டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக நடந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென கீழே கிடந்த கல்லை எடுத்து வேலப்பனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பழனிச்சாமி என்ற முதியவர் வாலிபரை தடுக்க முயன்றுள்ளார். ஆனாலும் […]
