தனது மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் கைது செய்தனர். கோபிநாத் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தனது […]
