75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கலை பண்பாட்டு மையம் இணையவழியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 6 தலைப்புகளில் ஆறு கலை போட்டிகளை நடத்தியது. அதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. அந்த விழாவில் தலைமை தாங்கிய துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி பரிசு பொருட்களை வழங்கினார். இந்த விழாவில் வேல்ஸ் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் சி.கார்த்திகேயன், ம.வெ.சுதாகரன், இசை மற்றும் […]
