கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என திருநங்கைகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கலை நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. இதனால் கலைத்துறையில் உள்ள கலைஞர்களின் குடும்பத்தினர் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் இருக்கும் […]
