பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருது பெறுவதற்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக அரசு மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கடந்த சட்டசபை தேர்தல் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருந்ததாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் […]
