கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சேதுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது குலசேகரப்பட்டினம் கடலில் கிருஷ்ணகுமார் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். இந்நிலையில் திடீரென எழுந்த பெரிய அலையில் கிருஷ்ணகுமார் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குலசேகரப்பட்டினம் […]
