அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் கார்த்திக் முரளிதரன், அபிஜித் சிங், மாரிசியோ ரோமரா ஆகியோர் கொரோனா பெருந்தொற்றின் போது மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் குறைபாடுகள் மற்றும் அதனை சீர் செய்த வழி முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேராசிரியர் […]
