அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில், இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில், இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், […]
